உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான சாலையால் விவசாயிகள் அவதி

மோசமான சாலையால் விவசாயிகள் அவதி

கிருஷ்ணராயபுரம் : நந்தன்கோட்டை சாலை, மோசமாக இருப்பதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து நந்தன் கோட்டை கிராமத்தில் இருந்து, மகிளிப்பட்டி வரை தார் சாலை உள்ளது. சாலை அருகில் உள்ள விவசாய நிலங்களில் வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் அறுவடை செய்து, இந்த சாலை வழியாக வாகனங்களில் விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.தற்போது சாலையின், பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை புதுப்பிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ