உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

கரூர்: கரூர் அருகே மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வெள்ளியணை பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகள் விவேகா, 23; பி.ஏ., பி.எட்., வரை படித்துள்ளார். திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த, 28ல், வீட்டில் இருந்து வெளியே சென்ற விவேகா, இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், விவேகா செல்ல-வில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த விவேகாவின் தந்தை வேலுசாமி, 48, போலீசில் புகார் செய்தார்.வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை