உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

பள்ளி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவரின், 16 வயது மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். பிறகு, வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை, போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !