மேலும் செய்திகள்
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மந்தம்
25-Nov-2024
மாயனுார் கதவணையில்மீன் விற்பனை மும்முரம்கிருஷ்ணராயபுரம், டிச. 2-கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. இந்த கதவணையில் ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து விற்பனை செய்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால், மீன்கள் வாங்க ஏராளமான மக்கள் அதிகாலை முதல் காத்திருந்தனர். இதில், ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை, 100, விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 300 கிலோ மீன்கள் விற்பனையாகின.
25-Nov-2024