உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மார்கழி மாத வெள்ளி அலங்காரத்தில் அம்மன்

மார்கழி மாத வெள்ளி அலங்காரத்தில் அம்மன்

கரூர்: புன்னம்சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மார்கழி மாத வெள்ளிக்கிழ-மையையொட்டி, சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், மார்கழி மாத வெள்ளிக் கிழமையையொட்டி, மூலவர் அம்ம-னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, சந்தன காப்பு, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபா-ராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், நேற்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்ம-னுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மலர் மாலைகள் கொண்டு, அலங்காரம் செய்து வழிபாடு பூஜை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.* மாயனுார், செல்லாண்டியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி