மேலும் செய்திகள்
நடப்பாண்டு மாவட்டத்தில் 714.14 மி.மீ., மழை பதிவு
27-Dec-2024
கரூர்: ''கரூர் மாவட்டத்தில், 771.44 மி.மீ., மழை பெய்துள்ளது,'' என, டி.ஆர்.ஓ., கண்ணன் தெரிவித்தார்.கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவ-லக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப் பட்ட, பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.பிறகு, டி.ஆர்.ஓ., கண்ணன் பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தனியார் மற்றும் கூட்டு-றவு சங்கங்களில் போதுமான அளவில், 4,897 மெட்ரிக் டன் ரசா-யன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல் பயிர் சாகுப-டிக்காக, நான்கு மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்-டுள்ளன. அதேபோல், சிறுதானிய விதைகள், எட்டு மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன. எண்ணெய் வித்துக்கள், மூன்று மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன. கரூர் மாவட்டத்தில் இயல்-பான மழையளவு, 652.20 மி.மீ., பெய்ய வேண்டும்.ஆனால் நடப்பாண்டு டிசம்பர் வரை, 771.44 மி.மீ., மழை பெய்-துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, 10 முதல், 15 நாட்க-ளுக்குள் அஞ்சல் மூலம் பதில் அளிக்க அதிகாரிகள் மூலம் உத்தர-விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், உதவி கலெக்டர் சுவாதி, வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவானந்தம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, ஆர்.டி.ஓ., முகமது பைசல் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
27-Dec-2024