ரயில் பாதையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
குளித்தலை: குளித்தலை அடுத்த சின்னம்மா நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரம்யா, 47. கணவர் பாலசுப்பிரமணி, 53. இவருக்கு குடிப்ப-ழக்கம் இருந்து வந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த, 9 காலை 6:30 மணியளவில் தனது ஊரில் உள்ள ரயில்வே கேட் அருகே மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு கரூர் அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.