உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, டாஸ்மாக் கடை அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.அரவக்குறிச்சி அடுத்த நம்பாகவுண்டனுார் அருகே உள்ள, வாய்க்கால் ஊர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 45. இவர், அரவக்குறிச்சியில் இருந்து ராஜபுரம் செல்லும் சாலையில், அவ-ரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வாகனத்தை வேகமாக இயக்கியதால், டாஸ்மாக் கடை அருகே சென்றபோது நிலை தடு-மாறி கீழே விழுந்தார். இதில், பாலகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ