உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் விழும் தென்னை மட்டை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் விழும் தென்னை மட்டை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கரூர் : வாகனங்களில் திறந்த நிலையில், தென்னை மட்டைகளை ஏற்றிச் செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.வேலாயுதம்பாளையம், வாங்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் அதிகளவு தென்னை மரங்கள் உள்ளன. இங்கிருந்து, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு தேவையான காய்ந்த தென்னை மட்டைகள், வேன் மற்றும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இதை ஏற்றி செல்லும் பெரும்பாலான வாகனங்களின் மேற்புறம், திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுவதால், சில மட்டைகள் சாலைகளில் விழுகின்றன. இதனால், பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது.சாலையின் மையப்பகுதியில் விழுந்து கிடக்கும் மட்டைகளால், பைபாஸ் சாலைகளில் செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுகின்றனர். எனவே, தென்னை மட்டைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை