நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் 75 சதவீத பணிகள் நிறைவு
கரூர்: நெரூர்-உன்னியூர் இடையே, காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணிகள், 75 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் மேற்கு கரையில் நெரூரும், கிழக்கு கரையில் திருச்சி மாவட்டம் உன்னியூரும் உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்டம் உன்னியூர், காட்டுப்புத்துார், தொட்டியம், முசிறி பகுதிகளுக்கு வாங்கல்-மோகனுார் பாலம் வழியாக, 15 கி.மீ முதல், 20 கி.மீ., வரை சுற்றி செல்ல வேண்டி-யுள்ளது. நெரூர்--உன்னியூர் இடையே காவிரியாற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதன்படி, 101.30 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடந்து வருகி-றது.இது குறித்து, மாநில நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் கூறி-யதாவது:இந்த உயர்மட்ட பாலம், 1,100 மீட்டர் நீளம், 25 துாண்களுக்கு இடையில், 26 ஸ்பான்கள் அமைக்கப்படும். இணைப்பு சாலை-யுடன் சேர்ந்த பாலம், 2,245 மீட்டர் நீளமாகும். பாலத்தின் மொத்த அகலம், 12.90 மீட்டர். வண்டி வழிகள், 10.50 மீட்டர் இருக்கும். இருபுறமும் நடைபாதைகள் இருக்கும். உன்னியூர் பக்-கத்தில் உள்ள, அணுகு சாலையின் ஒரு பகுதியாக கால்வாயின் குறுக்கே சிறு பாலமும் கட்டப்படும்.கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில், 25 துாண்கள் கட்டுமான பணி நிறைவ-டைந்து, 19 ஸ்பான்கள் வைக்கும் பணிகளும் முடிவடைந்துள்-ளது. நெரூர் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்-டுள்ளது.தற்போது, 75 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. பாலம் கட்டி முடிக்கப்பட்டால் நெரூர், உன்னியூர் பகுதி மட்டுமின்றி, கரூரிலி-ருந்து சென்னை செல்வோருக்கு வசதியாக இருப்பதுடன், பயண நேரமும் வெகுவாக குறையும். திருச்சி உள்பட பல்வேறு மாவட்-டங்களில் இருந்து, நெரூரில் உள்ள சதாசிவ பிரம்மேந்திரர் கோவில் வந்து செல்ல வசதியாக அமையும்.இவ்வாறு, கூறினர்.