உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் ஒன்றியம், மாயனுார் ஆசி-ரியர் பயிற்சி மையம் சார்பில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' இரண்டு நாள் சிறப்பு பயிற்சி நடந்தது. தரகம்பட்-டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த, இரண்டு நாள் பயிற்சிக்கு, தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன் தலைமை வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் முத்துபழனி, முதுகலை ஆசிரியர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்-தனர். கடவூர் வட்டார கல்வி அலுவலர்கள் சங்கீதா, மீனா ஆகியோர், பயிற்சியை தொடங்கி வைத்து, பல்வேறு ஆலோச-னைகளை வழங்கினர். மாயனுார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜ்குமார், மேற்பார்வை செய்து ஆலோசனை வழங்-கினார். ஏற்பாடுகளை மாயனுார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ரமணி செய்திருந்தார். இப்பயிற்சியில் கடவூர் வட்டார பகுதிகளிலிருந்து, 200க்கும் மேற்பட்ட தொடக்க-நிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி