உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / என்.சி.சி., மாணவர் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

என்.சி.சி., மாணவர் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

கரூர்: புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர் சார்பில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி, நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமையில் நேற்று நடந்தது.பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்-கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை மீண்டும் அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராகவும், மீண்டும் மஞ்சப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என, கோஷமிட்டபடி சென்றனர்.பேரணியில், பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி,என்.சி.சி., அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை