உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாங்கல் காப்பு காட்டில் பிளாஸ்டிக் அகற்றம்

வாங்கல் காப்பு காட்டில் பிளாஸ்டிக் அகற்றம்

கரூர்:கரூர் மாவட்ட சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை மற்றும் ஷீடு அறக்கட்டளை சார்பில், வாங்கல் காப்புக்காடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி நேற்று நடந்தது.பிளாஸ்டிக் பொருட் கள் முழுமையாக அகற்றப்பட்டு, உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கை தவிர்த்தல், மீண்டும் மஞ்ச பையை பயன்படுத்த வேண்டும், நீர் நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்களை போடக்கூடாது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் சண்முகம், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர் வேல்முருகன், தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் சுகுமார், ஆலோசகர் பழனியப்பன், ஷீடு அறக்கட்டளை நிர்வாகி திருமூர்த்தி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை