எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் திறன் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
கரூர், கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், பள்ளி மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை ஊக்குவிக்கும் வகையில், திறன்-2025 என்ற தலைப்பில் பல்வேறு வகையான போட்டிகள் நடந்தன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வராணி கலந்து கொண்டார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவியர் தங்களது ஆசிரியர்களின் தலைமையில் கலந்து கொண்டனர். மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரை, பேச்சு, நடனம், பாடல், நாடகம், வினாடி வினா, அறிவியல் கண்காட்சி மற்றும் பல போட்டிகள் நடத்தப்பட்டது. முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அதில், கரூர் பரணி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், கரூர் பி.ஏ., வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாவது இடத்தையும் பெற்றது. கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் முருகன், மாணவர் சேர்க்கை குழும தலைவர் சுந்தரராஜூ, மாணவர்- விவகாரங்கள் துறை தலைவர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.