உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உப-கரணங்கள், ரேஷன் அட்டை கோருதல் உள்பட மொத்தம், 567 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. மாற்றுத்திற-னாளிகளிடம், 86 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தகுதியான பயனா-ளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில், இரண்டு பயனாளிக-ளுக்கு தலா, 1.6 லட்சம் ரூபாய் மதிப்பில் என, 2.12 லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஆர்.டி.ஓ.,க்கள் முகமதுபைசல் (கரூர்) உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்