க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
க.பரமத்தி: 'க.பரமத்தி பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, பஞ்., யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகு-தியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள க.பரமத்தியில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவ-லகம், அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட, 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், அப்பகுதியை சுற்றி-யுள்ள முன்னுார், குப்பம், பவுத்திரம், நெடுங்கூர், காருடையாம்-பாளையம், நடந்தை, ஆரியூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில், 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் வேலைக்காகவும், வெளியூர் செல்-லவும், வெளியூர்களிலிருந்து பரமத்திக்கு தினசரி பஸ்சில் பயணம் செய்கின்றனர். அப்போது, நுாற்றுக்கணக்கான மக்கள் ரோட்டோரத்தில் பல மணி நேரம் காத்துகிடப்பதால் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பஸ் ஸ்டாப்பில் நிற்-பதால் பல்வேறு பிரச்னைக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளின் நலன்கருதி, க.பரமத்தி பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.