மேலும் செய்திகள்
வாழை இலை விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்
11-Feb-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளப்பள்ளி, கருப்பத்துார், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கொம்பாடிப்பட்டி, பிள்ளபாளையம், மகாதானபுரம், பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதில், பூவன் வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 150 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள், வாழைத்தார்களை வாங்கிச்சென்றனர்.
11-Feb-2025