உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு உயர்நிலை பள்ளியில் வட்டார கலைத்திருவிழா

அரசு உயர்நிலை பள்ளியில் வட்டார கலைத்திருவிழா

கரூர், கரூர் அருகே கவுண்டம்பாளையம், எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளியில், வட்டார அளவில் கலைதிருவிழா போட்டி நடந்தது.பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தி முடிக்கப்பட்டு, வட்டார அளவில் போட்டிகள் நடக்கின்றன. இதன்படி, தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார அளவிலான போட்டி நேற்று நடந்தது. 1 முதல், பிளஸ் 2 வரையான மாணவ, மாணவியருக்கு நடனம், பாட்டு, கவிதை, ஓவியம் உள்பட, 34 வகை தலைப்புகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், 5 பிரிவாக போட்டி நடத்தப்பட்டது. 80 பள்ளிகளை சேர்ந்த, 1,300 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, தான்தோன்றிமலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி