கரூர் அருகே சேதம் அடைந்த சிமென்ட் மின் கம்பம் மாற்றம்
கரூர் அருகே சேதம் அடைந்தசிமென்ட் மின் கம்பம் மாற்றம்கரூர், நவ. 12-கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்து, நான்காவது வார்டு காலனி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில், பொதுமக்கள் வசதிக்காக சிமென்ட் மின் கம்பம் அமைக்கப்பட்டு, மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சிமென்ட் மின் கம்பத்தின் அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் கீழே விழும் நிலையில் உள்ள சிமென்ட் மின் கம்பத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கயிறு மற்றும் கொசுவலை ஒயரால் கட்டி வைத்திருந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளி யானது.இதையடுத்து, சேதம் அடைந்த சிமென்ட் மின் கம்பத்தை, மின்வாரிய ஊழியர்கள் அகற்றி விட்டு, புதிய மின் கம்பத்தை அமைத்துள்ளனர்.