உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஈசநத்தம் சாலையில் கூடுதல் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

ஈசநத்தம் சாலையில் கூடுதல் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி, ஈசநத்தத்தில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி அருகே ஈசநத்தத்தில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் அதிகளவு கிராம பகுதிகள் உள்ளன. ஆனால், இந்த சாலையில் ஆங்காங்கே குறிப்பிட்ட துாரம் வரை, கிராம பகுதிகளுக்கு பிரியும் இடத்தில் போதிய அளவு மின் வசதி இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் சாலை விபத்து நடைபெறுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், ஈசநத்தத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில், கிராம பகுதிகளுக்கு பிரியும் இடத்தில், கூடுதலாக மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கூடுதல் கவனம் செலுத்தி, மின் விளக்கு வசதிகளை செய்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி