உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சந்தையூர் வார சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை

சந்தையூர் வார சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை

கிருஷ்ணராயபுரம்:சந்தையூர் வார சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை மும்முரமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூரில் நேற்று வார சந்தை கூடியது. ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த சில நாட்களாக, வெயில் அதிகம் இருப்பதால் ஆடு, கோழிகள் விற்பனை குறைவாக இருந்தது. நேற்று கூடிய சந்தையில் சீரான நிலையில் ஆடு, கோழிகள் விற்கப்பட்டது. 7 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 5,500 ரூபாய், நாட்டு கோழிகள் கிலோ, 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை