உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சீரான விலையில் பூக்கள் விற்பனை

சீரான விலையில் பூக்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், செக்கணம், எழுதியாம்பட்டி, தாளியாம்பட்டி, சேங்கல், கரட்டுப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போது பனி காலம் என்பதால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் விரிச்சிப்பூக்கள் கிலோ, 100 ரூபாய், சின்னரோஜா, 120 ரூபாய், செண்டுமல்லி, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய பகுதிகளில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு பூக்கள் கொண்டு செல்லப்பட்டு, வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். பூக்கள் சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி