உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணை அருகே சூடுபிடித்த மீன் விற்பனை

மாயனுார் கதவணை அருகே சூடுபிடித்த மீன் விற்பனை

கிருஷ்ணராயபுரம்: மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்-ளது. இந்த கதவணையில் சேமிக்கப்படும் காவிரி நீரில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இதில், ஜிலேபி, கெண்டை மீன்கள் அதிக-ளவில் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்-களை பிடித்துக்கொண்டு வந்து, கதவணை அருகே செல்லும் கட்-டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால், மீன்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஜிலேபி மீன் கிலோ, 80 ரூபாய், கெண்டை மீன், 70 ரூபாய், விரால், 500 ரூபாய், பாறை, 170 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது. மொத்தம், 300 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்-யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை