கரூர் அருகே சாலையில் ஓடிய கழிவுநீர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
கரூர், கரூர் அருகே, சாலையில் கழிவுநீர் ஓடியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.கரூர் அருகே, தான்தோன்றிமலை சிவசக்தி நகரில் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், பல நாட்களாக தான்தோன்றிமலை சிவசக்தி நகரில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறி, சாலையில் ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சிவசக்தி நகரில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவசியம்.