உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமராவதி பாசன வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

அமராவதி பாசன வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

கரூர்: கரூர், ஜாமியா நகர் வழியாக செல்லும் அமரா-வதி பாசன வாய்க்-காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கரூர், பெரிய குளத்துப்பாளையத்தை சுற்றியுள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஜாமியா நகர் வழியாக, அமராவதி பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது சாக்-கடை வாய்க்காலாக மாறி, செடிகள் அதிகளவில் வளர்ந்துள்-ளன. மண் மேடுகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் பரவி, கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் மழை காலங்களில் மழைநீர் சாலையில் ஓடும் நிலை ஏற்படுகிறது. துர்-நாற்றம் வீசுவ-தோடு, கொசு உற்பத்தி மையமாக மாறி உள்ளது. சுகாதார சீர்-கேட்டை தடுக்க, பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் செல்லும் வாய்க்காலை துார்வாரி, தேங்கியுள்ள கழிவு பொருட்-களை அகற்ற வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை வைத்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ