உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழிமலை கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை

புகழிமலை கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை

கரூர்: புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மார்கழி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.பிரசித்தி பெற்ற, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு மார்கழி மாத கிருத்திகையையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்-தது. தொடர்ந்து சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்தர்க-ளுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்க-ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், மார்கழி மாத கிருத்திகையையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ