உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழிமலை கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை

புகழிமலை கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை

கரூர்: புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மார்கழி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை, நேற்று நடந்தது.கரூர் மாவட்டம், புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரம-ணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவருக்கு, மார்-கழி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது.அதைதொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிர-சாதம் வழங்கப்பட்டது.அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், மார்கழி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி