உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருக்கயிலாய உற்சவர் திருவீதி உலா: பக்தர்கள் பங்கேற்பு

திருக்கயிலாய உற்சவர் திருவீதி உலா: பக்தர்கள் பங்கேற்பு

கரூர் : கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சார்பில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, திருக்கயிலாய உற்வச திருவீதி உலா நடந்தது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. தொடர் ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, திருக்கயிலாய உற்சவ திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உற்சவர் முருகப்பெருமானை வழிபட்டனர்.நேற்று காலை சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. இன்று காலை, திருக்கல்யாண உற்சவம், வரும், 24ல் தேரோட்டம், 25ல் தீர்த்தவாரி, 26ல் ஆளும் பல்லக்கு, 27ல் ஊஞ்சல் உற்சவம், 28ல் வெள்ளி வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்