உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை

கரூர் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை

கரூர், அக். 22-கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை சாரல் மழை பெய்தது.மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், குறைந்தழுந்த தாழ்வு நிலை உருவாக, வாய்ப்புள்ளதால் நேற்று முதல் இன்று வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.இந்நிலையில், நேற்று காலை முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. மாலை, 4:30 மணி முதல் கரூர் டவுன், திருகாம்புலியூர், சுக்காலியூர், வெள்ளியணை, வாங்கல், வேலாயுதம்பாளையம், க.பரமத்தி, பசுபதிபாளையம், திருமாநிலையூர், மண்மங்கலம், வெங்கமேடு, தான்தோன்றிமலை, காந்தி கிராமம், புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன், சிறிது நேரம் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.மேலும் கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூர் டவுன் மற்றும் மாயனுார் பகுதிகளில் தலா, 1 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை