உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் காய்கறி சாகுபடி பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் காய்கறி சாகுபடி பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் காய்கறி சாகுபடி பணி தீவிரம்கிருஷ்ணராயபுரம், நவ. 28-கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், காய்கறி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவக்குளம், தாராபுரத்தனுார், மகிளிப்பட்டி, குழந்தைப்பட்டி, வரகூர், அந்தரப்பட்டி, உடையந்தோட்டம், பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் வெண்டைக்காய், கத்திரிக்காய், செடிகளில் பூக்கள் பிடித்து காய்கள் காய்த்து வருகிறது.பின்னர் காய்கள் அறுவடை செய்து கரூர், குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் விற்பனைக்கு அனுப்புகின்றனர். மழை காலம் என்பதால், காய்கறிகள் விற்பனை சீராக நடந்து வருகிறது. கத்திரிக்காய் கிலோ, 40 ரூபாய், வெண்டைக்காய் கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை