உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர்: மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 39,000 கன அடியாக நேற்று அதிகரித்தது.மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பகுதிக்கு குறுவை சாகுப-டிக்காக கடந்த ஜூன், 12ல் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்-டது. இதனால், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 26,560 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 39,238 கன அடியாக அதிகரித்தது. அதில், 38,418 கன அடி தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுப-டிக்காக காவிரியாற்றில் திறக்கப்பட்டது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்காலில், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்-காலில், 820 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.08 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை