உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றது

செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றது

கரூர்: அமராவதி அணையில் இருந்து, தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்-டுள்ளதால், கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு, தண்ணீர் வரத்து நின்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன், வினாடிக்கு, 50,000 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நி-லையில், மழை குறைவால் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி-யதால், அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் வினாடிக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 480 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் செட்டிபாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு வினாடிக்கு, 16 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், 440 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 70.05 அடியாக இருந்தது. * மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்-படி வினாடிக்கு, 434 கன அடியாக தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 20.30 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் வாய்க்-காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ