மேலும் செய்திகள்
நால் ரோட்டில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
24-Nov-2025
கரூர்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை-ஈ-ரோடு பிரிவு சாலையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-கோவை மற்றும் ஈரோடு சாலை, திரு-காம்புலியூர் முனியப்பன் கோவில் அருகே பிரிந்து செல்கிறது. இந்த வழியாக நாள்தோறும், லாரிகள், பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இதனால், முனியப்பன் கோவில் பகுதியில் அடிக்கடி விபத்-துகள் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில நாட்களில் மட்டும், போக்குவரத்து போலீசார் பணியில் உள்-ளனர். அந்த பகுதியில் விபத்து ஏற்படும் பட்-சத்தில், கோவை மற்றும் ஈரோடு சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், முனியப்பன் கோவில் பகுதியில் ஏற்-படும் விபத்துகளை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்-டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.இதுகுறித்து, திருக்காம்புலியூர் பகுதி மக்கள் கூறியதாவது:கோவை சாலை ஆண்டாங்கோவில் பகுதியில் இரண்டு பள்ளிகளும், திருகாம்புலியூர் பகுதியில் ஒரு பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியர் விபத்து நடக்கும் பிரிவு சாலை பகுதியில் நடந்தும், சைக்கிளிலும் செல்கின்றனர். இதை தவிர, அந்த பகுதியில் வசித்து வரும் மக்களும் செல்கின்றனர். அப்-போது, கோவை மற்றும் ஈரோடு சாலையில் வரும் வாகனங்கள் விபத்தில்சிக்கி கொள்கின்-றன. எனவே விபத்துகளை தவிர்க்க, முனியப்பன் கோவில் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
24-Nov-2025