| ADDED : மே 12, 2024 07:34 AM
கரூர் : கரூர் நகரில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பிடித்து, குடும்பத்தினரிடம் ஒப்படைக்க, திருச்சி போலீசார் பாணியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, ஜவஹர் பஜார், தான்தோன்றி மலை வெங்கடரமண சுவாமி கோவில், சாய்பாபா கோவில் உள்ளிட்ட பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிகின்றனர். அதில், 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் மட்டும், கோவை சாலையில் வாகனங்கள் செல்லும் எதிர் திசையில் ஓடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்.சில மாதங்களுக்கு முன், திருச்சியில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேசி, உறவினர்களி டம் ஒப்படைக்கும் பணியை, அம்மாவட்டத்தை சேர்ந்த போலீசார், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செய்தனர்.அதேபோல், கரூர் நகரில் சுற்றி திரியும் மனம் நலம் பாதிக்கப் பட்டவர்களை பிடித்து, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண் டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்