உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது

கரூர்: தென்னிலை அருகே, உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, பீடா கடையில் பணம் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்-தனர்.கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கார்வழி சீலநாயக்கன்-பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 65. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 11ல் ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த நவீன் குமார், 29, என்பவர், தன்னை உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, பால-சுப்பிரமணியத்தின் மளிகை கடையில் சோதனை செய்துள்ளார். அப்போது, கடையில் இருந்த, 52,000 ரூபாயை நவீன் குமார் திரு-டிக்கொண்டு சென்று விட்டார்.இதுகுறித்து, மளிகை கடை உரிமையாளர் பாலசுப்பிரமணி கொடுத்த புகார்படி, தென்னிலை போலீசார் நேற்று, நவீன் குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி