உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி

கரூர், கரூர் அருகே, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.குளித்தலை நச்சலுார் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன், 34; இவர் நேற்று முன்தினம், ேஹாண்டா யூனிகார்ன் பைக்கில், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வீராக்கியம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி எதிரே உள்ள, கிணற்றின் தடுப்பு மீது பைக் மோதியது. அதில், கீழே விழுந்த அரவிந்தனுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. பிறகு, ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அரவிந்தன் உயிரிழந்தார்.இதுகுறித்து, அரவிந்தன் மனைவி ஞானசுந்தரி, 31, கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை