உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புத்தகங்களை படித்தால் அறிவு வளரும் சொற்பொழிவில் தகவல்

புத்தகங்களை படித்தால் அறிவு வளரும் சொற்பொழிவில் தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, பழையபேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமை வகித்தார்.இதில், மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பன்னீர்-செல்வம் பேசியதாவது: மாணவர்கள் தங்கள் பள்ளி முதல் கல்-லுாரி பருவம் வரை மட்டுமே, தங்கள் அறிவை மேம்படுத்தி கொள்ள முடியும். அதற்கு உதவும் வகையில், நுாலகங்களில் பல்-வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த புத்தகங்களை படிக்க படிக்கத்தான் அறிவு வளரும். அதை மேடைகளில் பேசி மேம்படுத்தி கொள்ள வேண்டும். பல்வேறு தலைப்புகளில் பேசும் போது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை-யுடன், மொழி சார்ந்த அறிவும் வளரும். இவ்வாறு பேசினார்.நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்-வாளர் மாதேஸ்வரன், துாய்மை இந்தியா இயக்க பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், வாசகர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ