உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.05 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ரூ.1.05 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந்தைக்கு, ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று, 600க்கும் மேற்பட்ட ஆடு-களை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 7,500 முதல், 8,200 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 300 முதல், 500 ரூபாய் வரை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்ப-னையானது. இதேபோல் நேற்று கூடிய சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 230 மாடுகள் மற்றும் கன்று-களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்-பின மாடு ஒன்று, 42,000 முதல், 67,000 ரூபாய் வரை விற்பனை-யானது. அதேபோல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 9,000 முதல், 32,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்-தையில், ஆடுகள், 55 லட்சம் ரூபாய்க்கும், மாடுகள், 50 லட்சம் ரூபாய்க்கும் என, மொத்தம், 1.05 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ