உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு கத்தி வெட்டு

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு கத்தி வெட்டு

ஓசூர்: ஓசூர் தின்னுார் வாசவி நகரை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன், 40, டிரைவர்; இவரது மகன் அரசு, 20. கூலித்தொழிலாளி; கடந்த, 14 மதியம், 3:30 மணிக்கு, அப்பகுதியை சேர்ந்த தன் நண்பரான சுல்தான், 21, என்பவரை அழைத்து கொண்டு, பைக்கை அதிவே-கமாகவும், அலட்சியமாகவும் ஓட்டிச் சென்றார். இதை பார்த்த லிங்கேஸ்வரன், மகனை தட்டிக்கேட்டார். அவர்களுக்குள் வார்த்தை தகராறு ஏற்பட்ட நிலையில், அரசு தன் நண்பர் சுல்தா-னுடன் சேர்ந்து, தந்தை லிங்கேஸ்வரனை வீட்டின் முன் வைத்து கத்தியால் வெட்டினார்.இதில் தலையில் படுகாயமடைந்த லிங்கேஸ்வரன், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அவ-ரது மகன் அரசு மற்றும் சுல்தான் ஆகிய இருவரை, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர். சுல்தான் மீது, ஓசூர் டவுன் ஸ்டேஷனில் கடந்தாண்டு நடந்த ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிட்டத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி