உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள் வழங்கும் பள்ளி ஹெச்.எம்.,

மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க சைக்கிள் வழங்கும் பள்ளி ஹெச்.எம்.,

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பண்டசீமனுார் கூட்ரோடு அருகே, குண்டலானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 1986ல் துவக்கப்பட்ட இப்பள்ளியில், சுற்று வட்டார மாணவர்கள் படித்தனர். தனியார் பள்ளி மோகத்தால் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இரண்டு ஆசிரியர்களுடன் இயங்கிய பள்ளி, தற்போது ஓராசிரியர் பள்ளியாக மாறியுள்ளது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தற்போது தலைமை ஆசிரியராக பணியாற்றும் வெங்கடாபதி, தன் சொந்த செலவில் மாணவர்களுக்கு, சிறுவர்களுக்கான சைக்கிள்களை வாங்கி கொடுத்து வருகிறார்.இது குறித்து அவர் கூறியதாவது:கடந்த 10 ஆண்டுகளாக பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து, ஓராசிரியர் பள்ளியானதால், தலைமை ஆசிரியராகவும் செயல்பட்டு, பாடங்களையும் நானே எடுத்து வருகிறேன். பள்ளியில் ஆறு மாணவர்களே படிக்கும் நிலையில், அதை அதிகப்படுத்த, 6,500 ரூபாய் மதிப்புள்ள சிறுவர்களுக்கான சைக்கிள்களை சொந்த செலவில் வழங்கி வருகிறேன்.அரசு பள்ளியின் சலுகைகளோடு, சிறப்பான கல்வியை கொடுக்கவும் முயன்று வருகிறேன். மாணவர்களின் பெற்றோரும் இதை உணர்ந்து, பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பள்ளிக்கு சுற்றுச்சுவர், குண்டும் குழியுமான பாதைக்கு பேவர் பிளாக் கற்கள் பதித்து, பாதையை அரசு சரி செய்து கொடுத்தாலே, ‍அப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர தயாராக உள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி