உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் 7 பேரின் வேட்பு மனு தள்ளுபடி

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் 7 பேரின் வேட்பு மனு தள்ளுபடி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் பேட்டியிட தாக்கல் செய்யப்பட்ட, 6 வேட்பாளர்களின், 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில் போட்டியிட கடந்த, 20ல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, 27ல் முடிந்தது. இதில், அ.தி.மு.க., - காங்., - பா.ஜ., - நா.த.க., உட்பட பிறகட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம், 34 பேர், 41 மனுக்களை தாக்கல் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மனுக்கள் பரிசீலனை நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு தலைமை வகித்தார். பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், அ.தி.மு.க., மாற்று வேட்பாளர் மாதைய்யா, பா.ஜ., மாற்று வேட்பாளர் ரேணுகா, காங்., மாற்று வேட்பாளர் கவிதாவின், 2 மனுக்கள், அகில இந்திய இளைஞர்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் வசந்தா, சுயேச்சைகள் சண்முகம், சாந்தமூர்த்தி ஆகியோரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 6 வேட்பாளர்களின் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், 28 பேரின் 34 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற நாளை (30ம் தேதி) கடைசி நாள். அன்றைய தினம் மாலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை