உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சென்டர் மீடியன் மீது பைக் மோதி கட்டட தொழிலாளர் 2 பேர் பலி

சென்டர் மீடியன் மீது பைக் மோதி கட்டட தொழிலாளர் 2 பேர் பலி

கரூர்: கரூர் அருகே சென்டர் மீடியன் மீது பைக் மோதிய விபத்தில் வட மாநில தொழிலாளர்கள், இரண்டு பேர் உயிரிழந்தனர்.பீகார் மாநிலம், மசூர் ஜாக் பகுதியை சேர்ந்தவர்கள் கோபி கிருஷ்ணன், 28; சந்தோஷ் குமார், 36; இவர்கள், இருவரும் கரூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனர். நேற்று முன்-தினம் இரவு கோபி கிருஷ்ணன், ஹீரோ ஹங்க் பைக்கில், சந்தோஷ் குமாருடன், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ் சாலை கோடங்கிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ெஹல்மெட் அணிய வில்லை.பைக்கை கோபி கிருஷ்ணன் ஓட்டியுள்ளார். அப்போது, பைக் திடீ-ரென நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. அதில், முகத்தில் படுகாயம் அடைந்த கோபி கிருஷ்ணனும், சந்தோஷ் குமாரும், கரூர் அரசு மருத் துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை