| ADDED : ஜூலை 04, 2024 11:59 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாய உபயோகத்திற்கு ஏரி-களில் வண்டல் மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து ஏரிகளின் பட்டியலை, அரசிதழில் வெளியிடப்பட்டுள்-ளது.அதன்படி, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 182 ஏரி-களில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 40 ஏரிகளும் என மொத்தம், 222 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்-கப்பட்டுள்ளது. அதன்படி, பர்கூரில், 19 ஏரிகள்; போச்சம்பள்ளி, 24; ஊத்தங்கரை, 13; தேன்கனிக்கோட்டை, 40; சூளகிரி, 33; ஓசூர், 51; கிருஷ்ணகிரி, 41; மற்றும் அஞ்செட்டியில் ஒரு ஏரி என மொத்தம், 222 ஏரிகளில் வண்டல் மண் எடுத்து கொள்ளலாம். விவசாய பணி மற்றும் பானை செய்ய இலவசமாக எடுக்க விண்ணப்பிப்பவர்கள், tnesevai.tn.gov.inஎன்ற இணையதள முகவ-ரியில் ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.