உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொத்த-கொண்டப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொக்லைன் வாகனம் மூலம் மண்ணை தோண்டி, டிராக்டரில் கடத்தி செல்வ-தாக, ஓசூர் தாசில்தார் குணசிவாவிற்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அவரது தலைமையிலான வருவாய்த்துறை-யினர், உரிய அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளிய இரு டிராக்டர் மற்றும் ஒரு பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். வாகன உரி-மையாளர்கள், டிரைவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ