உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காரில் கடத்திய ரூ.3.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

காரில் கடத்திய ரூ.3.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஓசூர் சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த எக்ஸ்.வி.யூ., காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், 62 மூட்டைகளில், 3.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது. விசாரணையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரிக்கு புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹரிசந்திரா சிங், 34 என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்