வங்கியில் செலுத்தப்பட்ட 7 கள்ள நோட்டுகள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையில் உள்ள வங்கியில் கடந்த, 27ல் ஷான்பாஷா, 65, என்பவர், 3.50 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். அந்த, 500 ரூபாய் கட்டில், 7 கள்ள நோட்-டுகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து வங்கி மேலாளர் காமித்திரி சர்மா, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்படி, கள்ள நோட்டு குறித்து போலீசார் விசாரிக்-கின்றனர்.