புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில், பெட்டிகடைகளில் புகையிலை விற்ற கிருஷ்ணகிரி, கந்திகுப்பம், குருபரப்பள்ளி, ஓசூர், மத்திகிரி பகுதிகளை சேர்ந்த, 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 750 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.