மேலும் செய்திகள்
முகாமிட்ட 85 யானைகளை விரட்ட முடியாமல் தவிப்பு
13-Nov-2024
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, 20க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று ஏரியில் ஆனந்த குளியல் போட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ராயக்கோட்டை, கிருஷ்-ணகிரி வனச்சரக பகுதிகளில், 225க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், 100க்கும் மேற்பட்ட நிரந்தர யானைகள் தவிர, 125க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து இடம் பெயர்ந்தவை. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளி-யேறும் யானைகள், ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள, 60க்கும் மேற்பட்ட யானைகளில், 20க்கும் மேற்பட்டவை குட்டிகளுடன் தனியாக பிரிந்து, திம்மசந்திரம் ஏரியில் ஆனந்த குளியல் போட்-டன. நீண்ட நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் சென்றன. தேன்க-னிக்கோட்டை வனச்சரகத்தில் ஆலஹள்ளி, தாவரக்கரை, திம்ம-சந்திரம், நொகனுார், தின்னுார், மலசோனை, முள்பிளாட், சந்த-னப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில், பல்வேறு குழுக்களாக யானைகள் முகாமிட்டுள்ளதால், அவற்றை கர்நாடகா மாநிலத்-திற்கு விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்-றனர்.
13-Nov-2024