மேலும் செய்திகள்
அங்கன்வாடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
13-Sep-2024
ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.இதில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை, அரசு ஊழியர்களாக அறிவித்து, கிரேடு 3, மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைபடுத்தி குறைந்தபட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு, 26,000 ரூபாய்,- உதவியாளர்களுக்கு, 21,000- ரூபாய் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகை, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000- ரூபாய் வழங்க வேண்டும். 10 ஆண்டு பணிமுடித்த அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அல்லது பத்தாண்டு பணி முடித்தவுடன் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும், என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒன்றிய தலைவர் சித்ரா, மாவட்ட பொருளாளர் சுஜாதா, செயலாளர் பழனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
13-Sep-2024