உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பர்கூரில் புதிய கட்டடம் கட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வலியுறுத்தல்

பர்கூரில் புதிய கட்டடம் கட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பி.டி.ஓ., வளாகத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட வட்-டார அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஐந்து ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட, 227 அங்கன்-வாடி மையங்களை சேர்ந்த, 143 அங்கன்வாடி பணியாளர்கள், 114 உதவியாளர்கள் பல்வேறு அலுவலக பணிகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். மேலும் இங்கு பதிவேடு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டடம் மிகவும் சேதம-டைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக மழை காலங்-களில் தண்ணீர் கசிந்து உள்ளே வருகிறது. இதனால் பணியாற்றுப-வர்கள், அலுவலகம் வந்து செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்-றனர். எனவே பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி